மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு..!
Published on

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் மா.கம்யூ.கட்சியின் 23-வது அகில இந்திய மாநாட்டில் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பெ.சண்முகம், கருமலையான் ஆகியோர் மத்திய கமிட்டியின் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

69 வயதான சீதாராம் யெச்சூரி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com