நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கான்பூரில் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ராணுவ வீரர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். #Tamilnews
நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Published on

கான்பூர்,

உத்தரபிரதேச மாநில கான்பூர் சக்கீர் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது திடீரென தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவ வீரரின் தங்கை கூறுகையில்,

எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் திருமணவிழாவின் போது அவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொன்று றந்துவிட்டதாக கூறினர். ஆனால் அவரின் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது என கேள்வி எழுப்பி உள்ளார்.

திருமண விழாவில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com