வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ள அதிநவீன ஆய்வகம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டம்

அபாயகரமான வைரஸ்களில் இருந்து மனித குலத்தை காப்பது குறித்து ஆய்வு செய்ய அதிநவீன ஆய்வகம் ஒன்றை அமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ள அதிநவீன ஆய்வகம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டம்
Published on

போபால்,

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து உலக நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு, விலைமதிப்பில்லா மனித உயிர்களையும் இழக்க நேரிட்டது. இதற்கு தீர்வாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அவசர கால அனுமதியோடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற வைரஸ் பாதிப்புகள் வருங்காலத்தில் மீண்டும் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் எதிர்காலத்தில் அபாயகரமான வைரஸ்களில் இருந்து மனித குலத்தை காப்பது குறித்து ஆய்வு செய்ய அதிநவீன ஆய்வகம் ஒன்றை அமைக்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இந்த ஆய்வகம் அமைக்கப்படும் என பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் மன்மோகன் பரிதா தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றிய அதிநவீன உயிரியல் ஆய்வகங்கள் உலகின் வெகு சில நாடுகளில் மட்டுமே இருப்பதாகவும், இது போன்ற ஆய்வகத்தை இந்தியாவும் அமைக்க இருப்பதாகவும் மன்மோகன் பரிதா கூறியுள்ளார். ஐ.ஐ.டி.க்கள் மற்றும் பிரபல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து உயிரியல் தற்காப்புக்கான ஆய்வை மக்கள் நலனுக்காக மேற்கொள்வதாக தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com