தென் கடற்கரை ரெயில்வே மண்டலம் ஜூன் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் - அஸ்வினி வைஷ்ணவ்

விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரெயில்வே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
தென் கடற்கரை ரெயில்வே மண்டலம் ஜூன் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் - அஸ்வினி வைஷ்ணவ்
Published on

விசாகப்பட்டினம்,

​​நாட்டில் தற்போது 17 ரெயில்வே மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரெயில்வே மண்டலம் என்ற பெயரில் 18-வது மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய மண்டலத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜூன் 8 அன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், தென் கடற்கரை ரெயில்வே மண்டலம் வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் கூகுள் டேட்டா சென்டரின் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின் இது தொடர்பாக அவர் பேசியதாவது;

தென் கடலோர ரயில்வே மண்டலம் ஜூன் 1, 2026 முதல் இது நடைமுறைக்கு வரும். இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். ஆந்திரப் பிரதேசத்தில் ரெயில்வே நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக தென் கடற்கரை ரெயில்வே மண்டலம் இருக்கும்.

ஆந்திரப் பிரதேசத்தில் துறைமுகங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கான இணைப்புகள் உட்பட, மாநிலம் முழுவதும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ரூ. 1,06,000 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது, ​​நாட்டில் 17 ரயில்வே மண்டலங்கள் உள்ளன, மேலும் தெற்குக் கடலோர மண்டலம் 18-வது மண்டலமாக இருக்கும்.

தற்போது மாநிலத்தில் 16 வந்தே பாரத் ரெயில்களும் 22 அம்ரித் பாரத் ரெயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிழக்குக் கடற்கரை ரெயில் பாதை வழித்தடம் முழுவதும் நான்கு வழித்தடங்களாகத் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இது மேலும் 500 புதிய ரெயில்கள் வரை இயக்க வழிவகுக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com