மகரவிளக்கை காண சிறப்பு பாஸ் கட்டாயமாக்கப்படும்-தேவசம்போர்டு மந்திரி தகவல்

வாகன நிறுத்துமிட வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, முறையாக நெறிப்படுத்தப்படும் என்று தேவசம் போர்டு மந்திரி கூறினார்.
மகரவிளக்கை காண சிறப்பு பாஸ் கட்டாயமாக்கப்படும்-தேவசம்போர்டு மந்திரி தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கேரள தேவசம்போர்டு மந்திரி வி.என். வாசவன் தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலையில் கூட்ட நெரிசலைத் தடுப்பதை முன்னுரிமையாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புனிதப் படிகள், மலை ஏற்றப் பாதைகள், அடிப்படை முகாம்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.

மகரவிளக்கை காண சிறப்பு பாஸ்கள் கட்டாயமாக்கப்படும்.பக்தர்கள் மரங்களில் ஏறுவதையோ, பாதுகாப்பற்ற கட்டமைப்புகளில் ஈடுபடுவதையோ தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாகன நிறுத்துமிட வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, முறையாக நெறிப்படுத்தப்படும்.

அதே நேரத்தில், பக்தர்களின் அதிக வருகையை நிர்வகிக்கும் பொருட்டு 800-க்கும் மேற்பட்ட கேரள அரசு பேருந்துகள் சிறப்பு சேவைகளாக இயக்கப்படுகின்றன. தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களுக்கு குமுளியில் போதிய நிறுத்துமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com