இந்தியா வந்தடைந்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.
இந்தியா வந்தடைந்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
Published on

புதுடெல்லி,

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த வாரம் 16 ஆம் தேதி நடந்தது. இதில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி டுவிட்டர் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து, இந்தியா இலங்கைக்கு இடையிலான கலாச்சார, வரலாற்று நாகரிக உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். இந்தியா வந்தடைந்த கோத்தபய ராஜபக்சேவை மத்திய மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

இதையடுத்து இந்தியா வந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com