புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி: நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்

புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய விவரம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி: நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் நேற்று தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மாநில வாரியாக புள்ளிவிவரப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக திரிபுரா, உத்தராகண்ட் மாநில பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரிபுரா மாவட்டத்தில் 3,536 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தார்கள். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் திரிபுராவில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88,889 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com