கோவில்களில் திருடி வந்த வாலிபர் பிடிபட்டார்

கோவில்களில் திருடி வந்த வாலிபர் பிடிபட்டார்
கோவில்களில் திருடி வந்த வாலிபர் பிடிபட்டார்
Published on

துமகூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே மற்றும் கோலால போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கோவில்களின் கதவை உடைத்து பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் மர்மநபர்களால் திருடப்பட்டு வந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில், கோலால போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கோவில்களில் திருடி வந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் அருகே அல்லாபுரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்று தெரிந்தது. இவர், பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களை பொறுக்கி விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதுதவிர சிக்பள்ளாப்பூர் மற்றும் துமகூருவில் வீடுகள் மற்றும் கோவில்களின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி வந்தது தெரிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com