குடி பழக்கத்தை நிறுத்த சொல்லிய மனைவி...கணவர் செய்த வெறிச்செயல்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கணவரை தேடி வருகின்றனர்.
குடி பழக்கத்தை நிறுத்த சொல்லிய மனைவி...கணவர் செய்த வெறிச்செயல்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் முஜாரியா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நைத்துவா கிராமத்தை சேர்தவர் முனீஸ் சக்சேனா. இவரது மனைவி ஷானோ. இவர்களுக்கு சன்னி (வயது 8) மற்றும் அர்ஜூன் (வயது 5) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். முனீஸ் மது குடிக்கும் பழக்கம் உள்ளவராவர். இதனால் முனிஸ்க்கும் அவரது மனைவிக்கு பல பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு மிகுந்த குடிபோதையில் வீடு திரும்பிய முனீஸ்க்கும் அவரது மனைவி ஷானோக்கும் வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வீட்டில் குடிப்பதையும் ஷானோ தடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த முனீஸ் தனது இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து வந்து மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனை பார்த்து கொண்டிருந்த ஷானோவின் மாமியார் முன்னி தேவி மருமகளை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் தீ மளமளவென எரிய தொடங்கியதால், அவரால் காப்பாற்ற இயலாவில்லை. மேலும் அவருடைய கையிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து கொண்டிருந்த சன்னி மற்றும் அர்ஜூன் சத்தம் போட்டு அலறினர்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். மேலும் அவர்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷானோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இவரை காப்பற்ற முயன்றதில் தீக்காயம் அடைந்த மாமியாரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான முனீஸை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com