ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்கு கள் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தினர்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com