காவிரி-கோதாவரி இணைப்புக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு - மத்திய அரசு தகவல்

காவிரி-கோதாவரி இணைப்புக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையை மாநிலங்களவையில் மத்திய அரசு சமர்ப்பித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நதிகள் இணைப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி பிஸ்வேஷ்வர் துடு நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் காவிரி-கோதாவரி இணைப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபற்றி மத்திய அரசு தெரிவித்து இருப்பதாவது:-

3 இணைப்பு திட்டங்களை உள்ளடக்கிய காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை, தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் முடிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கான மாற்று ஆய்வு முடிக்கப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஜனவரி மாதம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com