

கவுகாத்தி,
அசாமில் கவுகாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஒரே நாள் இரவில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அபிஜீத் சர்மா கூறும்போது, உயிரிழந்தவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) இருந்தனர். அவர்கள் 4 நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு வந்தவர்கள். வார்டில் இருந்த 3 பேர் 24 மணிநேரத்தில் ஐ.சி.யூ.வுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
12 நோயாளிகளில் ஒருவர் கூட கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. அவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் அளவு 90 சதவீதத்திற்கு கீழ் இருந்தது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். அது உங்களை காப்பாற்றும் என கூறியுள்ளார்.