பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு

பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பொன் மாணிக்கவேலின் மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நேரமின்மை காரணமாக விசாரணையை பிப்ரவரி 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தபோது, பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்கவும், கைது செய்ய தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் நிராகரித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com