6 மாத சிறைதண்டனையை ரத்து செய்ய கோரிய நீதிபதி கர்ணனின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

6 மாத சிறைதண்டனையை ரத்து செய்ய கோரிய நீதிபதி கர்ணனின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
6 மாத சிறைதண்டனையை ரத்து செய்ய கோரிய நீதிபதி கர்ணனின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்த கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு கர்ணனுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டுருந்த போதிலும், அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கர்ணனின் இந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் வழக்கில் மேல் முறையீடுக்கு வாய்ப்பில்லை என கூறிய நீதிபதி கர்ணனின் கேரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com