முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு இன்று விசாரணை!

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி எம்.பி.பி.எஸ். மாணவர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு இன்று விசாரணை!
Published on

புதுடெல்லி,

இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கான நீட் தேர்வு மார்ச் 12-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி, எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பிப்ரவரி 4ந்தேதி அன்று பிற்பகலில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. மனு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களே இருந்தபோது, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை 6 முதல் 8 வாரங்களுக்கு மத்திய அரசு தள்ளி வைத்தது.

இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி எம்.பி.பி.எஸ். மாணவர்கள் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com