புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நாளை பதவியேற்பு

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நாளை பதவியேற்க உள்ளார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நாளை பதவியேற்பு
Published on

புதுடெல்லி,

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுனில் அரோரா ஓய்வு பெறுவதால், புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செயப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா நாளை பதவியேற்க உள்ளார்.

சுஷில் சந்திரா 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார். சுஷில் சந்திரா பதவிக் காலத்தில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com