இந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.
இந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்
Published on

புதுடெல்லி,

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு மந்திரி சுவராஜை சந்தித்தார்.

20 - வது ஆண்டு நட்புறவை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா, இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது, தனித்துவமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை கூட்டுறவை அதிகரிக்க இன்றைய சந்திப்பின்போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஜீம் யுவேஸ் லி டிரியன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com