பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடையவர் ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடையவர் ராஜஸ்தானில் கைது
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ஸ்லேமர் மாவட்டத்தில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் தடுப்புக்காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 55 வயதான ஹாசி கான் என்பவரை அவரது கிராமத்தில் வைத்து ராஜஸ்தான் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாசி கான் பல முறை பாகிஸ்தான் சென்று வந்திருப்பதும், இவருக்கு ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாசி கானிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், சில காலமாக ஹாசி கான் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கியிருந்தார். ஹாசி கானை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சில இடங்களில் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com