ஓட்டல் அறையில் இளம்பெண் மர்மசாவு

மைசூருவில் ஓட்டலில் அறை எடுத்து காதலனுடன் தங்கி இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டல் அறையில் இளம்பெண் மர்மசாவு
Published on

மைசூரு:

மைசூருவில் ஓட்டலில் அறை எடுத்து காதலனுடன் தங்கி இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டலில் அறை எடுத்து...

மைசூரு மாவட்டம் பிரியா பட்டணா தாலுகாவை சேர்ந்தவர் அபூர்வ செட்டி (வயது 22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்கள் செல்போன் எண்களை மாற்றி கொண்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில் இளம்பெண் தனது காதலனுடன் டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அபூர்வ செட்டி உடலில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக, வாயில் நுரையுடன் இறந்து கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து தேவராஜா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அபூர்வ செட்டி தனது காதலனுடன் 2 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியது தெரியவந்தது.

காதலனுக்கு வலைவீச்சு

ஆனால் அந்த அறையில் காதலன் இல்லை என கூறப்படுகிறது. இளம்பெண்ணின் உடலை மீட்ட போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதலன் அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இளம்பெண்ணின் காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com