கசப்பான உறவு இனிப்பாக மாறுமா...! மோடி-அமித் ஷாவுக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து பா.ஜனதா மற்றும் பல்வேறு தலைவர்களுக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்து உள்ளார்.
கசப்பான உறவு இனிப்பாக மாறுமா...! மோடி-அமித் ஷாவுக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா பானர்ஜி
Published on

புதுடெல்லி:

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான அரசியல் மோதல் நாடறிந்த விஷயம்.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர். இறுதியாக மம்தா பானர்ஜி தேர்தலில் வென்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு மாறவில்லை.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து பா.ஜனதா மற்றும் பல்வேறு தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி மாம்பழங்களை அனுப்பி வைத்து உள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் விளையும் மிகச் சிறந்த மாம்பழ வகைகளை கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார். அதோடு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் வாழ்த்துகளுடன் மாம்பழங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் கூட இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com