நாகையில் இருந்து இன்று முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

நாகையில் இருந்து இன்று முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
நாகையில் இருந்து இன்று முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
Published on

நாகப்பட்டினம், 

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com