மகாராஷ்டிராவில் டீ விற்று மாதம் ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டும் டீக்கடைக்காரர்

மகாராஷ்டிராவின் புனே நகரில் டீ விற்று மாதம் ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டி டீக்கடைக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். #TeaSeller
மகாராஷ்டிராவில் டீ விற்று மாதம் ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டும் டீக்கடைக்காரர்
Published on

புனே,

மகாராஷ்டிராவின் புனே நகரில் எவ்லி டீ ஹவுஸ் என்ற பெயரில் தேநீர் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த கடையானது நகரில் 3 இடங்களில் செயல்பட்டு வருவதுடன் பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஒவ்வொரு கடையிலும் 12 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன் நிறுவனர்களில் ஒருவரான நவ்நாத் எவ்லி இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சர்வதேச பிராண்டாக இதனை மாற்ற போகிறேன் என கூறியுள்ளார். பக்கோடா தொழில் போன்று, இந்த தேநீர் வியாபாரமும் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது என கூறியுள்ளார்.

அவர் இந்த கடையில் டீ விற்று மாதம் ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com