தொழில்நுட்ப பராமரிப்பு பணி: பாஸ்போர்ட் இணையதளம் நாளை மறுநாள் வரை இயங்காது

பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தொழில்நுட்ப பராமரிப்பு பணி: பாஸ்போர்ட் இணையதளம் நாளை மறுநாள் வரை இயங்காது
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ந் தேதி (நேற்று) இரவு 8 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை இயங்காது.

இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்பதோடு, தங்களது நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு, பராமரிப்பு பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com