நாட்டின் மிக பெரிய வருங்கால சொத்து தொழில்நுட்பம்: மத்திய மந்திரி கட்காரி பேச்சு

இந்தியாவின் வளர்ச்சி பாதையை வடிவமைப்பதில், தொழில்நுட்பம் சார்ந்த உருமாற்றம், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆகியவை ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
நாட்டின் மிக பெரிய வருங்கால சொத்து தொழில்நுட்பம்:  மத்திய மந்திரி கட்காரி பேச்சு
Published on

புதுடெல்லி

டெல்லியில் இன்று நடந்த அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சி பாதையை வடிவமைப்பதில், தொழில்நுட்பம் சார்ந்த உருமாற்றம், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆகியவை ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றார். அதற்காக பல யோசனைகள் உள்ளன.

அதனாலேயே, வாழ்க்கைக்கு தேவையானது தொழில்நுட்பம் என்பது நம்முடைய தொலைநோக்கு பார்வையாக உள்ளது. அது நம்முடைய நாட்டின் வருங்காலத்திற்கான மிக பெரிய சொத்து. அது அதிக அளவில் சாதிக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்றார்.

அடுத்த 7 ஆண்டுகளில் உலக அளவில் தானியங்கி சந்தையில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கான நோக்கத்திற்கான இலக்கையும் நிதின் கட்காரி அப்போது பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com