தெலுங்கானா: சுங்க சாவடி பணியாளர்கள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல்; பரபரப்பு வீடியோ

தெலுங்கானாவில் சுங்க சாவடி மற்றும் அதன் பணியாளர்கள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தெலுங்கானா: சுங்க சாவடி பணியாளர்கள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல்; பரபரப்பு வீடியோ
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஷாத்நகர் சுங்க சாவடி பகுதியில் வந்த கார் ஒன்றில் இருந்தவர்கள் கட்டணம் செலுத்துவதற்காக காரை நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில், திடீரென காரில் இருந்தவர்கள் வெளியே வந்து சுங்க சாவடியில் பணியில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் பிற பணியாளர்கள் ஓடி வந்து அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் சுங்க சாவடியும் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் காரில் வந்தவர் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை சேர்ந்த நசுருல்லாபாத் பஞ்சாயத்து தலைவர் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com