காஷ்மீரில் பயங்கரவாதிகள் எறிகுண்டு வீச்சு; சி.ஆர்.பி.எப். வீரர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் எறிகுண்டு வீசியதில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் எறிகுண்டு வீச்சு; சி.ஆர்.பி.எப். வீரர் காயம்
Published on

குப்வாரா,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹந்த்வாரா நகரில் லாங்கேட் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீரென எறிகுண்டு ஒன்றை வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்து உள்ளார். இதனை காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com