நிதி பகிர்வு இறுதி அறிக்கை நகலை நிதி மந்திரியிடம் வழங்கிய 15-வது நிதி குழு

நாட்டின் 5 ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கை நகல் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் இன்று வழங்கப்பட்டது.
நிதி பகிர்வு இறுதி அறிக்கை நகலை நிதி மந்திரியிடம் வழங்கிய 15-வது நிதி குழு
Published on

புதுடெல்லி,

நாட்டின் 15-வது நிதி குழு அதன் தலைவர் என்.கே. சிங் தலைமையில் செயல்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது பற்றி இந்த குழு பரிந்துரைகளை வழங்கும்.

இந்நிலையில் 15-வது நிதி குழு, 2020-21ம் ஆண்டுக்கு மத்திய வரியில் 41 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதுபோக ஒரு சதவீதம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதி பகிர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனினும், சமீப ஆண்டுகளில் நிதி குழு பரிந்துரைக்கு குறைவாகவே மாநிலங்களுக்கு நிதி பகிர்வு இருந்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று காலத்தில் நிதி குழு என்ற பெயரிலான 4 தொகுப்புகளை கொண்ட இறுதி அறிக்கையை நிதி குழு தயாரித்துள்ளது. இதன் முதல் அறிக்கையானது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கடந்த 9ந்தேதி வழங்கப்பட்டது. பின்னர் அதன் நகல் பிரதமர் மோடியிடம் நேற்று வழங்கப்பட்டது. இதேபோன்று அறிக்கையின் மற்றொரு நகலை 15-வது நிதி குழுவின் தலைவர் சிங் மற்றும் உறுப்பினர்கள் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து இன்று வழங்கினார்கள்.

இதன்பின்பு இந்த நிதி பகிர்வு பற்றிய அறிக்கை நாடாளுமன்ற அவையில் நிதி மந்திரியால் முன்வைக்கப்படும். அதனுடன், அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையும் அவையில் சமர்ப்பிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com