

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மக்களவையின் இன்றைய நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த மசோதா, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மட்டுமே.
ஆனால், மாணவர் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்ட விவகாரத்தில் உள்துறை மந்திரி பதில் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடும் சூழலில், மதியம் இரண்டு மணிக்கு நிகழ்ச்சி நிரலை மாற்றி, வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கும் மசோதாவை கொண்டுவந்து குறுக்கு வழியில் நிறைவேற்றியது பா.ஜ.க. அரசு.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.