சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் திடீர் மாற்றம்

சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் திடீரென மாற்றப்பட்டார்.
சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் திடீர் மாற்றம்
Published on

கொல்கத்தா,

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இதையடுத்து கொல்கத்தா போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அனுஜ் சர்மா நேற்று நியமனம் செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com