மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி என கூறிய தொழில் நுட்ப வல்லுனர் மீது வழக்கு - தேர்தல் கமிஷன் நடவடிக்கை

மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி என கூறிய தொழில் நுட்ப வல்லுனர் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி என கூறிய தொழில் நுட்ப வல்லுனர் மீது வழக்கு - தேர்தல் கமிஷன் நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்து வெற்றி பெற்றது என்று மின்னணு தொழில்நுட்ப வல்லுனர் என்று தன்னை கூறிக்கொள்கிற சையது சுஜா, லண்டனில் இருந்து அளித்த பேட்டி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு டெல்லி போலீசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில் சையது சுஜா, வதந்திகளை பரப்பி பதற்றத்தை உருவாக்கும் விதத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505 (1)-ஐ மீறி உள்ளார். அவரது கருத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com