மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 11 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கலை துறையில் காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன், மருத்துவத்துறையில் எச். வி. ஹாண்டே, அறிவியல் மற்றும் பொறியியலில் கே. ராமசாமி, சிவில் சர்வீசில் கே.விஜய் குமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், மருத்துவத்துறையில் புண்ணியமூர்த்தி நடேசன், கலை துறையில் மறைந்த ஆர். கிருஷ்ண, கலை துறையில் ராஜஸ்தபதி காளியப்பா கவுண்டர், இலக்கியம் மற்றும் கல்வியில் சிவசங்கரி, கலை துறையில் திருவாரூர் பக்தவத்சலம், அறிவியல் மற்றும் பொறியியலில் வீழிநாதன் காமகோடி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com