கேரள கடலில் மூழ்கிய 6 மீனவர்களை கடலோர காவல் படை மீட்டது

கேரள கடலில் மூழ்கிய 6 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டது.
கேரள கடலில் மூழ்கிய 6 மீனவர்களை கடலோர காவல் படை மீட்டது
Published on

கொச்சி,

கொச்சி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொல்லத்தில் இருந்து 35 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் படகு ஒன்று கடலில் சிக்கி மூழ்குவதாகவும் அதில் உள்ள 6 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடுவதாகவும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் உயிருடன் மீட்டனர்.

இதுதொடர்பாக கேரள மீன்வளத்துறை மீனவர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் மோசமான வானிலை நிலவுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com