நள்ளிரவில் அப்தாப் வீட்டிற்கு வந்த பெண் டாக்டர்! ஷ்ரத்தா உடல் வீட்டில் இருக்கும் போதே நடந்த பகீர் சம்பவம் ...!

ஷ்ரத்தா வாக்கரின் மண்டை ஓடு மற்றும் சில உடல் பாகங்களை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை
நள்ளிரவில் அப்தாப் வீட்டிற்கு வந்த பெண் டாக்டர்! ஷ்ரத்தா உடல் வீட்டில் இருக்கும் போதே நடந்த பகீர் சம்பவம் ...!
Published on

புதுடெல்லி

ஷ்ரத்தா வால்கரின் உடலை துண்டிக்க அப்தாப் பூனாவாலா பயன்படுத்திய ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.கடந்த வாரம், 5-6 அங்குல நீளமுள்ள ஐந்து கத்திகளையும் போலீசார் மீட்டனர்.இந்த கத்திகள் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஷ்ரத்தா வாக்கரின் மண்டை ஓடு மற்றும் சில உடல் பாகங்களை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தபோது டாக்டர் பெண்ணுடன் பழகியதாகக் கூறப்படுகிறது.

தனது காதலி ஷ்ரத்தா வால்கரை கொடூரமாக கொலை செய்த அப்தாப் அமீன் பூனாவாலா, ஷ்ரத்தாவின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் போது அவர் பழகியதாக கூறப்படும் பெண், தொழில் ரீதியாக டாக்டர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஷ்ரத்தாவை முதன்முதலில் சந்தித்த அதே தளமான பம்பிள் என்ற மொபைல் டேட்டிங் அப்ளிகேஷன் மூலம் அந்த டாக்டர் பெண்ணை சந்தித்துள்ளார்.

உளவியல் நிபுணரான அந்த பெண்ணை டெல்லி போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்தாப் அதே ஆப் மூலம் பல பெண்களை சந்தித்ததாகக் கூறப்பட்டதால், விசாரணை தொடர்பாக டேட்டிங் ஆப்பிற்கு போலீசார் கடிதம் எழுதியிருந்தனர்.

அப்தாப் பூனாவாலா உண்மை கண்டறியும் பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார், பின்னர் அவர் போதைப்பொருள் பகுப்பாய்வு பரிசோதனையையும் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அப்தாப் பூனாவாலாவின் 2வது பாலிகிராப் சோதனை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com