சுத்தியலால் தாக்கி விவசாயி படுகொலை

ஹாவேரியில் சுத்தியலால் தாக்கி விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.
சுத்தியலால் தாக்கி விவசாயி படுகொலை
Published on

ஹாவேரி:

ஹாவேரி மாவட்டம் மாசனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவப்பா (வயது 46). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினரைவிட்டு, தனியாக அந்த கிராமத்தில் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று, தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தலையில் காயங்களுடன், கிராமத்தின் புறநகர் பகுதியான நாகனூர் கிராஸ் அருகே இறந்துகிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அதுகுறித்து ஹனகல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், அவரது உடலை மீட்ட போலீசார், அதை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மகாதேவப்பா தலையில் சுத்தியலால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com