சமூக விரோத சக்திகளை அழிக்க அரசு உறுதி; நளின்குமார் கட்டீல் பேட்டி

சமூக விரோத சக்திகளை அழிக்க அரசு உறுதி என நளின்குமார் கட்டீல் பேட்டி அளித்துள்ளார்.
சமூக விரோத சக்திகளை அழிக்க அரசு உறுதி; நளின்குமார் கட்டீல் பேட்டி
Published on

மங்களூரு;

தட்சிண கன்னடாவில் கடந்த மாதத்தில் (ஜூலை) அடுத்தடுத்து படுகொலை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் கடலோர மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் பாதுகாப்பு பாடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரவீன் நெட்டார் படுகொலையில் தொடர்புடையவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். 2 தினங்களுக்கு முன்பு இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரவீன் நெட்டார் கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் துரித நடவடிக்கைக்கு எனது வாழ்த்துக்கள். இந்த கொலை குறித்த விரிவான தகவல்கள் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பின்னர் கிடைக்கும்.

போலீசாருக்கு அரசு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. எனவே குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை போலீசார் முனைப்புடன் தடுக்க வேண்டும். கர்நாடக அரசு சமூக விரோத சக்திகளை ஒழிக்க உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com