கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார் பஞ்சாப் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #AmarinderSingh
கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார் பஞ்சாப் முதல்-மந்திரி குற்றச்சாட்டு
Published on

சண்டிகர்,

பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்-மந்திரியாக பா.ஜ.க வின் எடியூரப்பா பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறியதாவது:

கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார். ஆட்சி அமைப்பதில் ஆளுநரின் பங்கு உள்ளது. குஜராத்தில் மோடி அரசாங்கத்தின் கீழ் மந்திரியாகவும், ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக அவர் செயல்பட்டுள்ளார். அவரின் செயல்பாடுகள் வெளிப்படையாக தெரிகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com