லோக்பால் 5 நட்சத்திர சொகுசு ஓட்டலில் இயங்கும் - அதிகாரிகள் அறிவிப்பு

லோக்பால் 5 நட்சத்திர சொகுசு ஓட்டலில் இயங்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
லோக்பால் 5 நட்சத்திர சொகுசு ஓட்டலில் இயங்கும் - அதிகாரிகள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் நாட்டின் முதலாவது லோக்பாலுக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த மார்ச் 23-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதர 8 உறுப்பினர்களுக்கு மார்ச் 27-ல் அதன் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

தலைவர், 8 உறுப்பினர்கள், ஊழியர்கள் அடங்கிய லோக்பால் அலுவலகம் டெல்லி சாணக்யபுரியில் உள்ள அசோகா ஓட்டலில் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அது தற்காலிக அலுவலகமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அசோகா ஓட்டல் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசு ஓட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com