தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
Published on

பாட்னா,

பீகார் சட்டசபையில் நேற்று அனைத்து கட்சி தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய குடிமக்கள் பதிவேடு பீகார் மாநிலத்துக்கு தேவையற்றது. தேசிய மக்கள்தொகை பதிவேடு, 2010-ம் ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுடனே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

முன்னதாக, முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேசுகையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கூடுதலாக சேர்க்கப்பட்ட கேள்விகளை நீக்குமாறு மத்திய அரசுக்கு எழுதி உள்ளோம். பெற்றோரின் பிறந்த இடம், தேதி போன்ற தகவல்கள் யாரிடமும் கேட்கப்படாது. எனவே, குழப்பம் தேவையில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com