

ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூரில் பத்னிதோப் பகுதியருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கீழ் நோக்கி பறக்க தொடங்கியது. இதனை கவனித்த உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பின்பு அந்த ராணுவ ஹெலிகாப்டர் பத்னிதோப் என்ற இடத்தில் விபத்தில் சிக்கி தரையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 விமானிகள் காயமடைந்து உள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு விமானிகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.