நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமமான
கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுயசார்பு திட்டம் நமக்கு புதிதல்ல. பழங்கால இந்தியா சுயசார்பாகவே இருந்தது
சுயசார்பு திட்டத்தின் மூலம் 27 லட்சம் கோடி ரூபாய்க்கான ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2021- ஆம் ஆண்டிலும் கொரொனாவுக்கு எதிரான போர் தொடரும்
ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கை
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி
பொருளாதாரம் மீட்சி பெற மத்திய பட்ஜெட் உதவும்:
கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது
கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி
பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை