திரிபுராவில் பாஜக முன்னிலை: இது ஒரு புரட்சிகரமான வெற்றி என ராம் பிரசாத் பேட்டி

திரிபுராவில் பாஜக முன்னிலை குறித்து இது ஒரு புரட்சிகரமான வெற்றி அம்மாநில பாஜக தலைவர் ராம் பிரசாத் கூறியுள்ளார். #TripuraElection2018
திரிபுராவில் பாஜக முன்னிலை: இது ஒரு புரட்சிகரமான வெற்றி என ராம் பிரசாத் பேட்டி
Published on

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தது பாஜக, அமைதி வளர்ச்சிக்காக மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று இடது சாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்தன.

இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நிலவரப்படி திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவில் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலை வகித்த நிலையில் அடுத்த சுற்றில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது.

இது குறித்து அம்மாநில பாஜக தலைவர் ராம் பிரசாத் செய்தியார்களிடம் கூறியதாவது:

இது ஒரு புரட்சிகரமான வெற்றி. திரிபுரா சுந்தரி மாதாவின் ஆசீர்வாதம் மாநில மக்களின் ஒத்துழைப்பு, பிரதமர் மோடி மற்றும் கட்சி ஊழியர்களின் கடினமான உழைப்பு ஆகியவற்றின் காரணமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது.

என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com