விவசாயியை கடித்துக் குதறிய மூன்று கரடிகள்-பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ

விவசாயி மீது 3 கரடிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம், ராவணகி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா பெஞ்சள்ளி (வயது 60). இவர் சம்பவத்தன்று வயலில் வழக்கம்போல் வேலைப்பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் இருந்து வந்த 3 கரடிகளும் அவரை சரமாரியாக தாக்கின. இதனால் வலித்தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். நாகப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த விவசாயிகள் ஓடிவந்து கூச்சலிட்டனர்.
இதனை தொடர்ந்து 3 கரடிகளும் அங்கிருந்து சென்றன. இதையடுத்து, படுகாயமடைந்த விவசாயியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவரகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இது குறித்த பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
விவசாயி மீது 3 கரடிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






