உத்தரபிரதேசத்தில் வேன், டெம்போ மீது டிரக் மோதி பயங்கர விபத்து: 16 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில், வேன் மற்றும் டெம்போ மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 16 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேசத்தில் வேன், டெம்போ மீது டிரக் மோதி பயங்கர விபத்து: 16 பேர் உயிரிழப்பு
Published on

ஷாஜகான்பூர்,

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் தேசிய நெடுஞ்சாலை 24-ல் உள்ள ஜம்கா கிராசிங்கில் வேகமாக வந்த லாரி, டெம்போ மற்றும் வேன் மீது அடுத்தடுத்து மோதியது. டிரக் மோதியதில், வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்த அனைவருமே வேனில் பயணித்தவர்கள் ஆவர். உயிரிழந்த 16 பேரில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காயமடைந்த நபர்களுக்கு, உரிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், தகுந்த இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com