திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.07 கோடி

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 68 ஆயிரத்து 374 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.07 கோடி
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் நீண்ட நேரம் சாமி வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை மற்றும் விழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகளவில் இருக்கும்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 68 ஆயிரத்து 374 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 241 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.4 கோடியே 7 லட்சம் ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com