உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பிசியோதெரபி உதவும் கவர்னர் பேச்சு

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பிசியோதெரபி உதவும் என கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பிசியோதெரபி உதவும் கவர்னர் பேச்சு
Published on

மங்களூரு-

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பிசியோதெரபி உதவும் என கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.

பிசியோதெரபி மாநாடு

தட்சிண கன்னடா மாவட்டம் பிசியோதெரபி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மங்களூருவில் பிசியோகான் 2023 சர்வதேச பிசியோதெரபி மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த மாநாட்டை கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், உலக பிசியோதெரபி தினத்தையொட்டி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிசியோதெரபி திறனை இணைக்கவும் என்ற தலைப்பில் விவாதிப்பது நல்ல விஷயம் ஆகும். சில வகையான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்கும், உடல் ரீதியாக வலுவூட்டுவதற்கும், சமூகத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பிசியோதெரபி உதவும்.

உடல் சிகிச்சை என்பது ஒரு பழங்கால சிகிச்சையாகும், இது சில வகையான காயம், நோய் அல்லது இயலாமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் இயக்கம், உடல் வலிமை மற்றும் செயல்பாட்டை மீட்டெடுப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பிசியோதெரபி உடல் காயத்திற்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், மனநல சவாலை எதிர்கொள்ளும் தைரியத்தையும் நோயாளிக்கு அளிக்கிறது.

பாதுகாப்பு அமைப்புகள்

தற்போது உடல் சிகிச்சையின் புகழ் மற்றும் ஏற்றுக்கொள்ளல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி உடல்தகுதியை நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றும் நோக்கத்துடன் பிட் இந்தியா இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பாராமெடிக்கல் துறை மிகவும் வளர்ந்து வருகிறது. பிசியோதெரபியில் தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம்.

மேலும், எலும்பியல் கிளினிக்குகள், மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் தகுதி வாய்ந்த பிசியோதெரபிக்கான தேவைகள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com