வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி

குஜராத்தில் முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி
Published on

அகமதாபாத்,

குஜராத்தில் முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், அதிக வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்த வேண்டும். முதல் தடவையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த வேண்டும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com