மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது. 6-வது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பொருளாதாரச் சூழல் கருதி மீண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வட்டியில்லாமல் வழங்கப்படும்.

இந்த ரூ.10 ஆயிரம் என்பது ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும். இந்த கார்டில் உள்ள தொகையை 2021, மார்ச் 31-ம் தேதி வரை செலவு செய்ய முடியும். இந்த ரூ.10 ஆயிரத்தை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com