

புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி வருகிறார்கள்.
பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு பலர் தாவுவது மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநிலங்களவையில் அறிவித்தார்.
மாநிலத்தில் நடக்கும் வன்முறை நடப்பதாகவும் தன்னால் அவையில் எதுவும் பேச முடியவில்லை எனவும் தினேஷ் திரிவேதி கூறினார்.மேலும், மாநில மக்களுக்கு நான் தொடர்ந்து சேவையாற்றுவேன் எனவும் தினேஷ் திரிவேதி கூறினார்.