திரிபுரா தேர்தல் வன்முறை; 98 பேர் கைது

திரிபுராவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் 98 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திரிபுரா தேர்தல் வன்முறை; 98 பேர் கைது
Published on

அகர்தலா,

திரிபுரா டி.ஜி.பி. கூறும்போது, ஏ.ஐ.டி.சி., சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்), பா.ஜ.க. மற்றும் வெளியாட்கள் 41 பேர் என மொத்தம் 98 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திரிபுரா முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பற்றி போலீசாரிடம் தெரிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் முன்பும் தெரிவிக்கப்படவில்லை.

ஊடகங்களில் முதன்முதலில் தகவல்கள் வெளிவந்தன. நீண்டநேரத்திற்கு பின்னரே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com