

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் லாரி மோதிய விபத்தில் சாலையோரம் நின்றிருந்த தந்தை மற்றும் 3 குழந்தைகள் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாலையோரம் நின்றிருந்த ஒரு குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.
லாரி மோதிய வேகத்தில் அங்கிருந்த சாக்கடை மூடி உடைந்ததால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் சாக்கடைக்குள் விழுந்தனர். இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த தந்தை சந்திரபிரகாஷ் மருத்துவமனையில் பலியானார். தாய் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேற்சொன்ன நபர்கள் சாலையோரம் பலூன் விற்று பிழைப்பு நடத்தி வந்தவர்கள் என தெரியவந்தது.